தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:

மக்கள் உரிமை: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக்குழு எப்படி அமைந்திருந்தது?

பேராசிரியர்: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொது குழுக்கூட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த அமர்வில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் தனியார் சட்ட வாரியத்தின் பல்வேறு குழுக்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் பற்றிய விவாதம் முதலிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த முறை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழு லக்னோவில் உள்ள புகழ்பெற்ற தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் நத்வா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது. லக்னோ நகரம் முழுவதும் இதற்காக விழா கோலம் பூண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரியத்தின் கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை வரவேற்க வரவேற்பு வளைவுகளும், தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. நத்வாவில் உள்ள மாணவர் தங்கும் விடுதிகளில் வாரிய உறுப்பினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு சுலைமானிய விடுதியில் அறை ஓதுக்கப்பட்டிருந்தது. ஒரு நவீன பல்கலைகழகத்திற்கு இணையாக பல்வேறு துறைகளுக்கு தனித்தனி கட்டிடங்கள், நூலகத்திற்கு என்று தனி கட்டிடம், புல்வெளித் தோட்டம், கூட்ட அரங்கம், வளாகத்தின் நடுவில் கம்பீரமாக பள்ளிவாசல் என்று பிரமாண்டமாக இருந்தது நூற்றாண்டு கண்ட நத்வா வளாகம். நத்வா மாணவர்கள் மிக இனிமையாக சேவை மனப்பான்மையுடன் விருந்தினர்களை உபசரித்தார்கள்.

கேள்வி: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
பதில்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்புச் சட்டம் 2009-ஐ தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. லிபரான் ஆணைய அறிக்கை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளுக்கு வகுப்பு கலவர தடுப்புச் சட்டத்தின் மூலம் பரிந்துரை காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இச்சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் கலவரம் நடைபெற்றிருக்கும் போது இச்சட்டம் அமுலுக்கு வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்தை தற்போதைய வடிவத்தில் கொண்டு வரவேண்டாம் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புரிந்து வரும் அராஜகத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாதுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்த விஷயத்தில் இந்தியா அடிபணிவதும் கண்டிக்கப்பட்டது. நேரு காலத்திய வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

லிபரான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுவதும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

திருமணங்களின் போது ஆடம்பரங்களை தவிர்த்து எளிமையாக நடத்த வேண்டும் என்றும் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தியும், சிறிய பிணக்கு களுக்காக திருமணத்தை முறித்துக் கொள்வதை தவிர்க்குமாறும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த பொது அமர்வின் போது 5 பெண்கள் உட்பட 50 பேர் கொண்ட வாரியத்தின் செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம்.ஹாசிமும் இவர்களில் ஒருவர்.

இந்த அமர்வின் போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் குறித்தும் அது குறித்த தமிழக முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு குறித்தும், இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகனுடன் நடத்திய பேச்சு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொது அமர்வின் தீர்மானங்களை விளக்கி லக்னோ ஈத்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980-களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992-க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.

அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ்தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தியிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசேவகர்கள் அயோத்திக்கு வந்திருக்க முடியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.


கேள்வி: அலிகர் பயணம் எப்படி அமைந்திருந்தது?
பேராசிரியர்: அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் எனது நண்பர்கள் பலரை சந்தித்தேன். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு பதிலளிக்கும் போது நாங்கள் சேர்ப்பதற்கு தயார்.
இந்த முறை தமிழ் நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் பிரசுரித்திருந்தோம். ஆனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என்றார். மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், இதழியல் உள்பட பல்வேறு பாடங்களை குறைந்த செலவில் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் தமிழக மாணவர்கள் இங்கே வருவதில்லை என்று அங்கு சந்தித்த காரைக்காலை சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாணவர் ஜக்கரியா குறைபட்டுக் கொண்டார். இவர் இங்கு முதுகலை அரபி படித்து விட்டு தற்போது இஸ்லாமிய அறிவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறார். அன்று மாலை அலிகர் ஜமாஅத்தே இஸ்லாமி வட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். தமிழகத்தில் தமுமுக ஆற்றி வரும் பணிகளை அறிந்து அலிகர் மக்கள் வியந்து போனார்கள்.

கேள்வி: டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருந்தது?

பேராசிரியர்: சிறுபான்மை அமைச்சக கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள தமிழக செய்தியாளர்களை தமிழக இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அவசியம் என்ற தமுமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னேன். சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் தங்கள் கடமையை மறந்து விட்ட நிலையில் வட இந்தியாவில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை சென்னைக்கு அழைத்து பெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதையும் அதற்காக நான் டெல்லியில் நடத்திய சந்திப்புகளையும் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு முக்கிய தமிழ் நாளிதழின் டெல்லி செய்தியாளர் மார்ச் 7, 2007ல் நீங்கள் டெல்லியில் நடத்திய பேரணியில் காணப்பட்டது போல் மக்கள் திரளும் ஒழுங்கும் நிறைந்த பேரணியை நான் இதுவரை பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக இடதுசாரிகள் நடத்திய பேரணியையும், சில முஸ்லிம் அமைப்புகள் மிஸ்ரா ஆணையம் தொடர்பாக நடத்திய பேரணியையும் தமுமுக நடத்திய பேரணியுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமானும் இதே கருத்தை என்னிடம் லக்னோவில் பதிவுச் செய்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். டெல்லியிலும் நீங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்

Thursday, March 18, 2010

புரைதாவில் மனித நேய மாநாடு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 25 ம் தேதி புரைதாவில் மனித நேய மாநாடு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ் தஃவா & த.மு.மு.க, புரைதா கிளை

Sunday, March 7, 2010

கோவையில் ம.ம.க. போராட்டம் இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்

மதுவிலக்கு அமலாக்க கோரி
கோவையில் ம.ம.க. போராட்டம்
இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்

கோவை,மார்ச.7-
கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையில் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர் இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநகர செயலாளர் ரபிக், மற்றும் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் அகமது கபீர், ஜபார்சாதிக், ஜாகீர், மைதீன் சேட், கவிஞர் ஹக், ஹக்கிம்,மற்றும் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரசாமி கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.

மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா

Tuesday, March 2, 2010

புரைதாவில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

கடந்த 25-02-2010 வியாழன் இரவு மவுலவி சக்கீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் புரைதா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் மார்க்கச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது சகோதரர் பக்கீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவுலவி அபுகாலித் அவர்களின் உரையைத் தொடர்ந்து ரியத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி ஜமால் முஹம்மது பாஸில் பாகவி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மவுலவி இஸ்மாயில் உமரி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

புரைதா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

சகோதரர் குர்ஷித் அவர்களின் கேள்வி பதில்களுக்குப் பின் சகோதரர் சையது யூசுப் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Sunday, February 28, 2010

ரகசிய கேமராக்கள்: பெண்களே ‍எச்சரிக்கை!

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.



மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம்.



குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு

இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க ரகசிய காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு

எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்!




போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.



காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.






Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Tuesday, February 2, 2010

தீனை நிலைநாட்ட முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாடு

திருச்சி தமிழ்நாடு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த 30,31 தேதிகளில் திருச்சி அருகே சனமங்கலத்தில் காலை தொடங்கியது. திருச்சி, சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் சனமங்கலத்தில் 44 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரமே மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்தது. திருச்சியிலிருந்து மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சை, குடந்தை, நெல்லை, மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கில் சனமங்கலத்தில் குவிந்தனர்.

மாநாட்டு அரங்கில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம், தங்குவதற்கு தனி இடங்கள், வணிக வளாகம், தொழுகைக்கு தனி இடம் என புதிய நகரமே சனமங்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து வருகின்ற மாநாட்டு பிரதிநிதிகளின் வசதிக்காக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் இரயில் நிலையத்திலிருந்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி வாழ்மக்களின் வசதிக்காக வரகனேரி, ஆழ்வார்தோப்பு, உறையூர் தர்கா, சுப்பிரமணியபுரம், பாலக்கரை, தென்னூர் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

குழந்தைகள் விளையாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் தில்லியிலிருந்தும் இயக்கத் தலைவர்கள் மாநாட்டுக்காக வந்திருந்தனர்.

தீனை நிலைநாட்டுங்கள். இதில் பிரிந்துவிடாதீர்கள்' என்ற மையக்கருத்தை முன்வைத்து இரண்டு நாள் இம்மாநாடு நடைபெற்றது.

மாநாட்டையொட்டி மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்டது இதனை முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் மௌலானா அப்துல் அஸீஸ் திறந்து வைத்தார்.

மௌலவி. இஸ்மாயில் இம்மதாதி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். மாநாட்டின் முதன்மை அமைப்பாளர் கரீமுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

'நாம் கனவு காணும் இந்தியா' என்கிற தலைப்பில் கருத்தரங்கமும், 'முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்' என்கிற தலைப்பில் சமுதாய அமர்வும், பெண்களுக்கென சிறப்புச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

மாநாட்டு மலர் வெளிடப்பட்டது.

256 பக்கங்களைக் கொண்ட இந்த மலர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாறு, தலைவர்களின் நேர்காணல்கள், சிறப்பு கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைக் கொண்ட ஆவணப் பேழையாக மிளிர்கிறது. மலரின் விலை ரூ.50. இந்த மலரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் வெளியிட, திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் பேராசிரியர் அப்துஸ் ஸமது பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கலந்துகொண்டுச் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

தினைநிலைநாட்டுங்கள் இதில் பிரிந்துவிடாதீர்கள் என்ற மையக் கருத்தில் இரண்டு நாட்கள் நாடந்த இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி, பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, ஜமாஅத்தின் மூத்த தலைவர்கள் அப்துல் அஜீஸ், இஜாஸ் அஸ்லம், அப்துர் ரகீப், தமிழ் மாநிலத் தலைவர் எ.ஷப்பீர் அஹ்மத், துணைத் தலைவர் மௌலவி ஹனீபா மன்பயீ, ‍ஷேக் முஹம்மது காரகுன்னு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய மகளிர் அணி அமைப்பாளர் அத்தியா சித்திகியா, மாநில மகளிர் அணி அமைப்பாளர் வஹீத் ஃபாகிரா, துணை அமைப்பாளர் கதீஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

'ஜமாஅத்தே இஸ்லாமி இந்திய திருநாட்டில் 67 ஆண்டுகாலமாய் தீனை நிலைநாட்டும் லட்சியத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய வாழ்வுமுறை முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் உயர்வடையும். துறைதோறும் சீர்திருத்தமும் ஒழுங்கும் நடைபெறும்' என்று மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹ்மத் குறிப்பிட்டார்.

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் பேசிய டாக்டர் ஹபீப் முஹம்மது 'பன்மைச் சமூகத்தின் நன்மைகளையும் சாதகமான சூழல்களையும் குறிப்பிட்டதோடு, சிக்கல்கள் தோன்றினால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் விளக்கினார். நாம் மட்டுமே நல்லவர்கள் மற்றவர்கள் எல்லாம் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே பிரிவுக்கும் பிளவுக்கம் வழிவகுக்கும். பிற மக்களை இழிவாகப் பார்க்கக் கூடாது' என்றார்.

இஸ்லாத்தில் முன்னுரிமைகள் என்ற தலைப்பில் பிரச்சனைகளின் தீவிரம் புரியாமல் சின்னச்சின்ன விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமைகளைப் பெரிய பிரச்சனைகளுக்குத் தருவதில்லை. சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் எவ்வளவோ இருக்க சாதாரண விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்கி, சமுதாயம் சிதறுண்டுக் கிடக்கின்றது. இந்நிலை மாறவேண்டும் தீனை நிலைநாட்டும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் மௌலவி நூஹ்.

கருத்தரங்கம் :
நாம்கனவு கானும் இந்தியா| என்ற கருத்தரங்கம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய செயலாளர் இஜாஸ் அஹ்மத் அஸ்லம், பழ.கருப்பையா, இஸ்லாமிய வங்கிக்கான பொதுச் செயலாளர் அப்துர் ரகீப், எஸ்.என்.சிக்கந்தர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பழ.கருப்பையா பேசும் போது, 'இந்தியாவில் ஏழ்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகின்றன. இஸ்லாம் கூறும் ஜகாத் எனனும் திட்டம் ஏழைகளின் வறுமையைப் போக்கி, அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்துகின்றது. தொழுகையை நிறைவேற்றிவிட்டு ஜகாத் கொடுக்காதவர்களை முஸ்லிம் என்றே இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாத்தின் இந்த உன்னத அம்சம்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நம் கனவுகள் நிறைவேற வேண்டுமானால் இஸ்லாம் கூறும் இதுபோன்ற கொள்கைகளைப் பின்பற்றவேண்டும்' என்றார்.

சமுதாய அமர்வு:

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் என்ற அமர்வுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜி.அப்துர் ரஹீம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ், வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், எஸ்.டி.பி.ஐ தமிழ்நாட்டுத் தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழகத் தலைவர் பேராசிரியர் எம்.பி.அஷ்அத் வஹீத் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கண்காட்சி:

இம்மாநாட்டில் இஸ்லாமிய வாழ்வை படம்பிடித்துக் காட்டும் மாபெரும் கண்காட்சியும் இடம் பெற்றது. இக்கண்காட்சியை அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத் தலைவர் அப்துல் அஜீஸ் திறந்து வைத்தார்.

இஸ்லாமிய வாழ்வு முறைகள், வழிபாடுகள், செயல்மாதிரிகள் தொடர்பான வண்ணப்படங்கள் நேர்த்தியாக அழகாக வைக்கப்பட்டிருந்தன. நபிகளாரின் பொன்மொழிகளும் விளக்கப்படங்களுடன் இடம் பெற்றிருந்தன.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ழருந்தன. பெண்கள் பகுதியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அரங்கமும் அமைக்கப்பட்ழருந்தது.

மலர் வெளியீடு:


மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. 256 பக்கங்களைக் கொண்ட இந்த மலர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாறு, தலைவர்களின் நேர்காணல்கள், சிறப்புக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட ஆவணப் பேழையாக மிளிர்கின்றது. மலரின் விலை ரூ.50. இந்த மலரை ஜமாஅத்தே இஸ்லாமியின் அகில இந்தியத் தலைவர் மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள் வெளியிட திருச்சி அய்மான் கல்லூரித் தாளாளர் பேராசிரியர் அப்துஸ் ஸமது பெற்றுக் கொண்டார்.

இந்த மாநாட்டையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தீர்மானங்கள்-

சமுதாய ஒற்றுமை, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம், விலைவாசி உயர்வு, இஸ்லாமிய வங்கி, வரதட்சணை எதிர்ப்பு, முழுமையான மது விலக்கு போன்ற பல தலைப்புகளில் தீர்மானங்கள் நிலைவேற்றப்பட்டன.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் துணைத் தலைவர் மௌலவி ஹனீபா மன்பயீ நிறைவுரை ஆற்றினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டின் துணை அமைப்பாளர் Nஷக் தாவூது நன்றி கூறினார்.

குல்லியத்துஸ் ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா குத்புதீன் அஹ்மத் பாகவி இறுதியாக உருக்கமான முறையில் பிரார்த்தனை (துஆ) செய்தார்.

மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மாநாட்டில் திரண்டனர். மாநாட்டின் தலைமை அமைப்பாளராக ஐ.கரீமுல்லாஹ் செயல்பட்டார்.
தீர்மானங்கள்

2010 ஜனவரி 30,31(சனி, ஞாயிறு) இருநாட்கள் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மாநில மாநட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


தீர்மானம்-1
சமுதாய ஒற்றுமை

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அறைகூவல்களையும் சந்திக்க சமுதாயம் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் தன்மை அல்லாஹ்வினால் அருளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, பாதுகாக்கப்பட்ட தீனில் மட்டுமே உண்டு. இந்த தீனை நிலைநாட்ட ஒருங்கிணைந்து பாடுபடுவதன் மூலமே சமுதாயத்தின் ஒற்றுமையை அடைய முடியும்.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நாம் மாற வேண்டும் எனில், நமக்குள்ளே நிகழும் விமர்சனங்கள், சண்டையிடுதல், அவதூறு கூறுதல் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஷலாயிலாஹா இல்லல்லாஷ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்| என்னும் கலிமாவை மொழிந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களே, நமது சகோதரர்களே எனும் உணர்வுடன் செயல்படுவதே சமுதாய ஒற்றுமையை உருவாக்கும். இது குறித்து தங்களின் ஆழமான கவனத்தைச் செலுத்தும்படி தமிழக முஸ்லிம் அமைப்புகளையும் சமுதாயத் தலைவர்களையும் இம்மாநாட்டின் மூலமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம்-2
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்

தமிழக அரசு கொண்டுவந்துள்ள கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்கிறது. அதே வேளையில், காலங்காலமாகப் பள்ளிவாசல் ஜமாஅத்துகளிலும், அரசு காஜிகள் மூலமாகவும் இஸ்லாமிய திருமணங்கள் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் இருந்துவருகிறது. இந்தத் திருமணப் பதிவுகளையே சட்டபூர்வமாக அங்கீகரிக்குமாறு தமிழக அரசை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.


தீர்மானம்-3
திருமணங்கள் இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற வேண்டும்

தமிழக முஸ்லிம்களின் திருமணங்களில் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள், வீண்விரயம், வரதட்சணை போன்ற இஸ்லாத்திற்கு மாற்றமான நடைமுறைகள் இருந்து வருகின்றன. இதனால் திருமணமாகாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இது மட்டுமன்று, இத்தீமைகள் புற்றுநோயைப் போல சமூகத்தைச் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே சமூகத்தில் நடைபெறும் திருமணங்களை இந்தத் தீங்குகள் இல்லாத இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுத்தப் பாடுபடுமாறு ஆலிம் பெருமக்களையும் சமுதாயத் தலைவர்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம்-4
தொடக்கப் பள்ளிகளின் அவசரத் தேவை
கல்வியறிவு இல்லாத சமுதாயம் முன்னேற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம் சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ளது. கல்வி வணிகமயமாகி விட்டிருக்கும் சூழலில் முஹல்லாக்கள் தோறும் தொடக்கப்பள்ளிக் கூடங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். எனவே முஹல்லாக்கள் தோறும் தொடக்கப்பள்ளிகளை உருவாக்குமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சமுதாயத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம்-5
விலைவாசி உயர்வு
அரசின் தவறான பொருளியல் கொள்கைகளின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். எனவே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.

தீர்மானம்-6

இஸ்லாமிய வங்கி

வட்டியின் அடிப்படையிலான பொருளியலும், ஊகம், சூதாட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலான வணிகமும் இன்றைய உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படையக் காரணங்களாகும். இவற்றுக்கு மாற்றாக வட்டியில்லாத இஸ்லாமிய வங்கிமுறை திகழ்கிறது. திட்டக் கமி~னின் பொருளியல் சீர்திருத்தங்களுக்கான டாக்டர். ரகுராம் ராஜன் குழு, இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறையை உருவாக்கும்படி நடுவணரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இம்மாநாடு ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு நடுவணரசைக் கேட்டுக் கொள்கிறது. மாநில அரசும், தமிழக எம்.பி. க்களும் இந்தியாவில் வட்டி இல்லாத இஸ்லாமிய வங்கியை உருவாக்க நடுவணரசை வலியுறுத்துமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-7

ஆபாசமும் பாலியல் வக்கிரங்களும்

பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற வெகுமக்கள் ஊடகங்களில் பொழுதுபோக்க எனும் பெயரில் வெளிவரும் ஆபாச, அருவருக்கத்தக்க வக்கிரங்களை இம்மாநாடு கடுமையாகக் கண்டிக்கிறது. இவற்றில் பெண்களை ஆபாசத்தின் குறியீடாகவும், விற்பனை சரக்காகவும் விளம்பரப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.

பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

பெண்கள் மீது இழைக்கப்படும் வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள், பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் ஆகியவற்றைத் தடுத்துநிறுத்த அரசை வலியுறுத்தும் படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-8
எட்டாக் கனியாகும் மருத்துவம்

இன்றைய மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அரசு வருடாந்திர பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ஒதுக்கும் பங்கு மிகமிகக் குறைவாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் அனைவருக்கும் சிறந்த இலவச மருத்துவம் கிடைக்க ஆவன செய்யும்படியும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-9

உலகமயமாக்கலின் கோர விளைவுகள்

உலகமயமாக்கலின் காரணமாக ஏற்படுகின்ற ஊறுகளையும் பாதிப்புகளையும் அதன் தொடர் விளைவாக மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை தனியார் மயமாக்கும் அரசின் மக்கள் விரோத நடவறக்கைகளையும் ஜமாஅத் வன்மையாக எதிர்க்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தொழிலாளர்களின் பலவீனமானவர்களின் உரிமைகளை நசுக்குகின்ற யாதொரு சட்ட உருவாக்கலையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எதிர்க்கிறது.

தீர்மானம்-10

அமெரிக்கா ஏகாதிபத்தியம்

அமெரிக்கா அரசும் அதன் நேசநாடுகளும் சுதந்திர நாடுகளில் தலையிட்டு அடக்குமுறைகளிலும் அக்கிரமக்களிலும் ஈடுபட்டுத் தம்முடைய ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், அந்த நாடுகளில் தம்முடைய உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுந்துள்ள அப்பாவி மக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுவதையும் அந்த விடுதலை வேட்கை நிறைந்த மக்களைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்துவதையும் இந்தக் கேடு கெட்ட இழிவான செயல்கள் அனைத்தையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது.

இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடுமைகளையும் அக்கிரமமான நடவடிக்கைகளையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது. பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் விடுதலை இயக்கத்திற்கும் ஜமாஅத் ஆதரவளிக்கின்றது.

தீர்மானம்-11

வழிகெட்ட கூட்டங்கள்

இஸ்லாத்தின் அடிப்படைகளில் மிக முதன்மையானது ஏக இறைக் கொள்கையும், முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் என்று நம்பிக்கை கொள்வதுமாகும். இதற்கு மாற்றமான கொள்கையில் உள்ளவர்களை முஸ்லிம்களாகக் கருத முடியாது.

இறுதி நபித்துவத்தை மறுக்கும் காதியானிகள், அஹமதியாக்கள், ஹதீஸை மறுப்பவர்கள் ஆகியோர் முஸ்லிம்கள் அல்லர் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

தீர்மானம்-12

தேவை- முழுமையான மதுவிலக்கு

மது தீமைகளின் தாய். குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரப்படுத்தும் அரசாங்கமே குடும்பங்களைச் சீரழித்து நடுத்தெருவில் நிறுத்தும் மதுவை விற்பனை செய்வது மிகுந்த வேதனைக்குரியது. குடும்பங்கள் குலைவதற்கும் நோய்கள் பெருகுவதற்கும் காரணமான மதுவை உடனடியாகத் தடைசெய்து முழுமையக மதுவிலக்கை அமல்படுத்துமாறு தமிழக அரசை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மாநாட்டு துளிகள்
பொழுதுபோக்குகளும் பரபரப்பும் நிறைந்த இந்த காலகட்டத்தில் இரண்டு நாள் மாநாடு நடத்துவது எவ்வளவு பெரிய சிரமம் என்பது பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரியும்.

அதை மிக நேர்த்தியாகவும் பிரம்மான்டமாகவும் செய்து முடித்து தனது திறமையை தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெரியபடுத்தியிருக்கின்றது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பு தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக செயல்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இப்போதுதான் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கின்றது.

மாநாடு நடைபெற்ற முதல் நாள் (30-01-2010) அன்று மாநாடு வளாகத்தில் வந்தபோது பார்வையாளர்கள் பிரமத்துவிடச் செய்தது.

சுமார் 5 கி.மீ. அளவுக்கு ட்யூப் லைட்டுகள் கட்டினர், 80 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பார்க்க முடிகின்றது.

200 க்கும் மேற்பட்ட கழிவறைகள், 100 க்கும் மேற்பட்ட குளியலறைகள், ஒழு செய்வதற்கான தண்ணீர் தொட்டிகள், குடிநீர் தேவைகளுக்காக லாரியில் குடிநீர் வசதிகள் என மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ப+ர்த்தி செய்ததை இம்மாநாட்டு வளாகத்தில் காண முடிந்தது.

மாநாட்டு வளாகத்தினுல் வாகணங்கள் சென்று வர தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன பெண்களுக்கு தனி வளாகம், தனி உணவறைகள், கழிப்பறைகள், குளியலறைகள், தங்குமிடம் என ஒரு பெரிய அரங்கமே அமைக்கப்பட்டிருந்தது. அனைவராலும் பாராட்டப்பட்டது.

தற்காலிக மருத்துவமனையும் தகவல் தொடர்பு மையமும் தீயனைப்பு துறை மையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவில் கொடுக்கப்பட்ட அதிக பவர் வாய்ந்த மெற்குரி விளக்குகள் என புதிய நகரம் உருவாகிவிட்டது போல் தோற்றமளித்தது.

ஆராவாரமின்றி அழைப்புப் பணிகளையும் இஸ்லாமிய பிரச்சாரப்பணிகளையும் செய்துவரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தென் தமிழகத்தையும் குறி வைத்து தமது பணிகளையும் விரைவு படுத்த வேண்டும்.

இதுபோன்ற மாநாடுகளை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சென்னை, கோவை, தஞ்சை, மதுரை போன்ற நகருங்களில் நடத்துவதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

டாக்டர் கே.வீ.எஸ்.ஹபீப் ரஹ்மான், பேராசிரியர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், குலாம் முஹம்மது, எஸ்.எம்.பாக்கர் போன்ற பிரபலமானவர்களை உருவாக்கியது ஜமாஅத்தே இஸ்லாமியே ஆகும். இவ்வாறு மேலும் பல தலைவர்களை சமுதாயத்திற்கு தரும் வாய்ப்பு தங்களுக்கு இருக்கின்றது என்பதை இந்த அமைப்பு உணரவேண்டும்.

இந்த மாநாடு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஆண்களை விட பெண்கள்தாம் அதிகமாககலந்து கொண்டன.

செய்தி:கோவை தங்கப்பா

Friday, January 29, 2010

முஸ்லிம் லீக்கின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார்.

சுதந்திர போராட்ட முஸ்லிம் தியாகிகளின் வரலாறு சமச்சீர் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி

திருவாரூர் மாநாடு புகைப்படத் தொகுப்பு!













ம.ம.கவில் இணைந்த பா.ஜ.க மற்றும் தி.மு.கவினர்

திருவாரூரின் மாநாட்டு நிகழ்ச்சிகள் உற்சாகமாக போய்க் கொண்டிருந்தபோது, மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அபுஸாலிஹ் செய்த அறிவிப்பு பல்லாயிரக் கணக்கானோரை ஆர்ப்பரிக்க வைத்தது.

ம.தி.மு.க.விலிருந்து கடந்த ஜனவரி-6 அன்று அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி செல்லச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ம.ம.க.வில் இணைந்தார்.

மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டமெங்கும் அவர் நாச்சிக்குளம் தாஜுதீனுடன் இணைந்து அனல் பறக்கும் பிறச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரின் தலைமையில் ஏராளமானோர் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ஆளுங்கட்சியான தி.மு.க. விலிருந்தும் 6 பேர் இணைந்தனர்.

ஆளும் கட்சியிலிருந்து விலகி நம்முடன் சேர்ந்ததும், நேர் எதிரான கொள்கையை கொண்ட பா.ஜ.க. மதவெறி கட்சியிலிருந்து விலகி, மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்ததும் பத்திரிக்கையாளர்களை ஆச்சரியத்தில் மூழ் கடித்தது.


Dowmload video