தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment