தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Thursday, March 18, 2010

புரைதாவில் மனித நேய மாநாடு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 25 ம் தேதி புரைதாவில் மனித நேய மாநாடு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ் தஃவா & த.மு.மு.க, புரைதா கிளை

Sunday, March 7, 2010

கோவையில் ம.ம.க. போராட்டம் இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்

மதுவிலக்கு அமலாக்க கோரி
கோவையில் ம.ம.க. போராட்டம்
இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்

கோவை,மார்ச.7-
கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையில் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர் இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநகர செயலாளர் ரபிக், மற்றும் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் அகமது கபீர், ஜபார்சாதிக், ஜாகீர், மைதீன் சேட், கவிஞர் ஹக், ஹக்கிம்,மற்றும் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரசாமி கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.

மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா

Tuesday, March 2, 2010

புரைதாவில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

கடந்த 25-02-2010 வியாழன் இரவு மவுலவி சக்கீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் புரைதா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் மார்க்கச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது சகோதரர் பக்கீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவுலவி அபுகாலித் அவர்களின் உரையைத் தொடர்ந்து ரியத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி ஜமால் முஹம்மது பாஸில் பாகவி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மவுலவி இஸ்மாயில் உமரி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

புரைதா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

சகோதரர் குர்ஷித் அவர்களின் கேள்வி பதில்களுக்குப் பின் சகோதரர் சையது யூசுப் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.