தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்!




போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.



காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.






No comments:

Post a Comment